Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Monday, 10 January 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (3)

நண்பர்களே நான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு சாரு பதில் அளித்து உள்ளார்.

பதில்கள் அமர்க்களம். என்னால் கார்த்திக்கு செய்து  கொடுத்த  சத்தியத்தை  மீறிவிட்டராம் சாரு.

பதில் தருகிறாரா  அல்லது வாரி விடுகிறாரா  என்றே தெரியவில்லை. நீங்கள் தான் சொல்லவேண்டும்.

பதில்கள் கீழே.

Sunday, 9 January 2011

சாரு நிவேதிதாவுக்கு ஓர் கடிதம் - மிஷ்கின் பேசாதது பலரால் பேசப்பட்டது, புகழப்பட்டது.

அன்புள்ள சாரு,

தங்களின் வலைத்தளத்தில் புத்தக வெளியீட்டு விழா என்னும் தலைப்பு பல வாரங்களாக ஓடி கொண்டிருகிறது. சமீபத்தில் “மிஷ்கினை விட்டு விடுங்களேன்; பாவம்” என உங்களுக்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று வலைத்தளத்தில் கூறியிருகிறீர்கள். இந்த கடிதமும் அது சம்பந்தபட்டது தான்.

தங்களின் ஏழு புத்தகங்களில் தேகம் நாவல் தான் பலரை சென்றடைந்துள்ளது என்று நான் ஆணித்தரமாக கூறுவேன். அதற்க்கு எடுத்துக்காட்டு பலர் தங்கள் வலைத்தளத்தில் எழுதிய மதிப்பீடு தான்.

Wednesday, 5 January 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (2)

மீண்டும் சில கேள்விகள் சாருவிடம் ,

1. ட்விட்டரில் அராத்து ஏன் யாரையும் follow பண்ணுவதில்லை? ஆனால் உங்கள் மூலம் பலர் அவரை follow செய்கிறார்கள் என்பது தெரிந்த செய்தி.இதை பற்றி நீங்கள் அராத்துவிடம் கேட்டதுண்டா? (ஒரு ச்சேஞ்சுக்கு நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாமே.)

2. சில எழுத்தாளர்களுக்கு அதிக ரசிகர்கள் இருந்தும், அவர்களுக்கு  ஏன் ஒரு ரசிகர் மன்றம் அமைவதில்லை? 

 3. நீங்கள் எழுதிய புத்தகத்தில், அவந்திக்காவுக்கும் கார்த்திக்கிற்கும் பிடித்த புத்தகங்கள் எது?

Wednesday, 29 December 2010

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (1)

ஆஹா பதில் கிடைத்து விட்டது.
(பார்க்க : http://charuonline.com/blog/?p=1598)

கேள்வி பதில்

2.நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி?

அருண் குமார்

பதில்:
ஆம்; நானேதான்.  அந்துமணி என்ற பெயரில் மட்டும் அல்ல; பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பெயர்களில் எழுதுபவனும் நானே.  ஞாநி என்ற பெயரில் கல்கியில் இப்போது அரசியல் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் மட்டும் அல்ல; துருக்கியிலும் ஓரான் பாமுக் என்ற பெயரில் எழுதி வருகிறேன்.  சந்தேகம் இருந்தால் கீதையின் இந்த ஸ்லோகங்களைப் பார்த்துக் கொள்ளவும்.

ஸ்ரீபகவான் கூறுகிறார்: “பார்த்த! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார்.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 5)

20.12.2010.
11.24 a.m.
Comments are closed.

ஆகா, சாரு என்னை கலாய்ச்சிடாரே.

அனாலும் அவர் பதிலை விட அவர் மேற்கோள் காட்டிய கீதையின் ஸ்லோகம் மிக அருமை.

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம்.

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்று தெரிந்த உடன், சில கேள்வி கணைகளை தயார் படுத்தி வைத்திருந்தேன்.

கேள்விகள்  இதோ,

Saturday, 25 December 2010

சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்-எதிர்வினை

நான் எழுதிய சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்க்கு வந்த எதிர்வினைகளால் இதை எழுதிகிறேன். (சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்,கமெண்ட்ஸ் பார்க்கவும்)

 கமெண்ட்ஸ் எழுதிய அனைவரும் சாருவின் வலைதளத்தில் இருந்து தானே என்னுடைய லிங்கிற்கு வந்தீர்கள்.உங்கள் விமர்சனத்தை charuonline -இல் பதிவு செய்து இருக்கலாமே? கண்டிப்பாக பதில் கிடைத்திருக்கும்.

புத்தகத்தை  படித்து தெரிந்து கொண்டதை தானே எழுதினேன். பிறகேன் நண்பர்களே இந்த வலைதளத்தை சண்டை களமாய் மாற்ற நினைக்கிறீர்கள்.

Wednesday, 22 December 2010

சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்

அன்பு நண்பர்களே,  சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார் படித்து முடித்து விட்டேன்.இனி கீழே வருவது புத்தகத்தின் விமர்சனம் அல்ல.வேறு எப்படி என்றாலும் எடுத்துகொள்ளுங்கள்.

சாரு, சரசம்-சல்லாபம்-சாமியார் என்ற டைட்டிலுக்கு  முதலில் copyright வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஏனனில் பிற்காலத்தில்  பட அதிபர்களிடம் நாம் சண்டைக்கு செல்ல நேரிடும்.அவ்வளவு அருமையான, பொருத்தமான டைட்டில் இது.

Wednesday, 15 December 2010

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

வாழ்கையில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீட்டு விழா இது.


குமுதம்,குங்குமம், விகடன் மட்டுமே படித்து கொண்டிருந்த நான், இந்திரா சௌந்தரராஜன் அவர்களது சில புத்தகங்களை வாங்கி படித்தேன் (சிறு வயதில் நான் பார்த்த அவரது  கதைகளில் உருவான சீரியல்களால் ஏற்பட்ட  தாக்கத்தினால்).புதிய அனுபவம் கிடைத்தது.


பின்னர் ஒரு நாள் நண்பர் மூலம் சாரு பற்றி கேள்வி பட்ட நான்,அவருடைய இணையதளம் மூலம் அவரை பற்றி மேலும் தெரிந்து, படித்து கொண்டேன்.அவரது எழுத்துகளால் உதிர்த்த மூன்று புத்தகங்களை வங்கி படித்து பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


இன்று வரை ஒரு நாளும் அவர் வலைத்தளத்தை படிக்காமல் இருந்ததில்லை.அவரால் பெரிதும் ஈர்க்க பட்டேன்.


கதைக்கு வருவோம்:

டிசம்பர் 13 மாலை 5 :45 க்கு, காமராஜர் அரங்கத்திற்கு சென்றடைந்தேன்.வாயிலில் ஒரு பெண்மணி எல்லோரையும் மிக அன்பாக  வரவேற்று கொண்டிருந்தார்.அப்போதுதான் கணிமொழி,தமிழச்சி மற்றும் பாலகுமரன் வந்திறங்கினர்.


 அவர்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்றால் உயிர்ம்மை பதிப்பகத்தினர் ஒரு மேஜையில் சாருவின் 7 புத்தகங்கள் விற்று கொண்டிருந்தனர். சற்றும் தாமதிக்காமல் 7 புத்தகங்களையும்  வாங்கி என் பையினுள் வைத்துவிட்டேன்.


பிறகு நாலடி எடுத்து வைத்ததும் ஒருவர் சிரித்த முகத்தோடு தண்ணீர் பாட்டிலும் சில தின் பண்டங்களும் கொடுத்தார்.அதையும் வங்கி கொண்டு உள்ளே சென்றால் அப்பப்பா எவ்வளவு  பெரிய அரங்கம் அருமையான இசையால் மிதந்து கொண்டு இருந்தது.


நடு வரிசை ஒரு சீட்டில் இடம்  பிடித்து கொண்டேன்.அப்போது மிஷ்கினும் மதனும் என்னை கடந்து சென்றார்கள். ஆர்வம்  அதிகரித்து விட்டது.


மேடையில் பிரம்மாண்டமான பேனரில் சாருவுடைய போட்டோவும் அவரது புதிய புத்தகங்களின் முகப்பும் பொறிக்கப்பட்டு இருந்தது .


சிறிது நேரத்தில் சாரு கண்ணில் தென்பட்டார்.வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினேன்.சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்தது.
ஒரு பெண் வர்னையாளரும் ,மனுஷ்ய புத்திரனும் மேடையில் தோன்றினர். பிறகு வந்திருந்த அணைத்து cheif  guest -களும் அந்த பெண்மணியால் அழைக்கப்பட்டு மேடையில் தோன்றினர்.


பின்னர் சாருவின் புத்தகங்களை திரு. நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட சாருவின் அன்பு நண்பர்கள் பெற்று கொண்டனர்.அப்போது தான் தெரிந்தது அவந்திகா அம்மா  தான் வாயிலில் அனைவரையும் அன்பாக வரவேற்று கொண்டிருந்த பெண்மணி என்று.முன்பே தெரிந்திருந்தால் அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன் அவரது அன்புள்ளத்திர்காக ( சாருவின் எழுத்து மற்றும் இணையம் மூலம் அவரை பற்றி தெரிந்திருக்கிறேன்).






பின்னர் சாருவின் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி ஒவ்வொரு பிரபலங்கள் பேசினர்.தமிழச்சி, மதன் மற்றும் எஸ்ரா அவர்களது பேச்சு மிக அருமை. மற்றவர்கள் பற்றிய விமர்சனம் இங்கு தேவை இல்லை.


பின்னர் முடிவுரைக்காக நம் சாரு மேடையில் தோன்றியதும் கை தட்டல், விசில்கள் பறந்தது. பின்னர் பேசிய சாரு மென்மையாக, அருமையாக பேசி நன்றி தெரிவித்து கொண்டார்.


விழா முடிந்ததும் வெளியில் சாருவை மிக அருகில் கண்டேன்.உண்மையிலேயே சூப்பர் ஹீரோ போல்தான் இருந்தார்.புத்தகங்களை  நீட்டி ஆட்டோகிராப் கேட்டேன்,இப்பொழுது வேண்டாம் புத்தக கண்காட்சிக்கு வாங்க  ஆட்டோகிராப்  தருகிறேன் என்று கூறினார்.மன சங்கடமான சூழ்நிலையில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பையை பார்த்தல்  உள்ள கேமரா இல்லை. மறதியால் மனம் வருந்தினேன்.


அனாலும் ஒரு சந்தோஷம் சாரு என் முதுகில் தட்டி கொடுத்தார்,ஆட்டோகிராப் கேட்டதற்கு.  கண்டிப்பாக இந்த ஏழு புத்தகங்களிலும் ஒரு நாள் ஆட்டோகிராப் வாங்கிவிடுவேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...