Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Thursday, 10 November 2011

கோட்டுர்புர நூலகத்தை மருத்துவமனையாக மாற்றி அமைக்க ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒரு கடிதம்...


என்னடா இவனும் கடிதம் எழுத வந்துட்டான்னு நினைக்கிறீங்களா ? நான் எப்பவோ முதல்வருக்கு எழுத நினைத்தேன்.  ஆனால் நிறைய பேர் என் மனதில் பட்டதை எழுதியதால் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். 

ஆனால் இந்த கடிதம் (அ) கட்டுரை (அ) ஆதங்கம் எதற்கு என்றால் தலைப்பிலேயே தெரிந்து விடும். சரி, கடிதம் எழுதிட்டு வரேன்....

அன்பின் ஆதரவாளர்களே, 

வணக்கம். சமீப காலமாக நடக்கும் கோட்டுர்புர நூலக பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருகிறேன்.  அதில் அறிக்கை வெளியிட்ட முதல்வர் , இத்திட்டத்திருக்கு  எதிர்ப்பு தெரிவிப்பவரை விட ஆதரவாளரான உங்கள் முழக்கம் தான் பெரிதும் இரைச்சலாய் இருக்கிறது. 


ஆதரவாளரான உங்களை வகையிட்டு பார்த்தல், குழந்தைகள் மருத்துவமனை தான் தேவை என்பவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம், 200 கோடியை வைத்து மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமே என்று குரல் கொடுப்பவரை கண்டால் தான் கோபம் தலைக்கேறுகிறது. 

ஏங்க எங்கதாங்க ஊழல் இல்ல? இவ்வளவு சதுர அடிக்கு இவ்வவளவு ருபாய் , புத்தகங்கள் இவ்வளவு ரூபாய்னு  கணக்கு போடுறீங்களே இது மாதிரி அரசு கட்டடம் பாலங்கள் உட்பட எல்லாத்துக்கும் உக்காந்து கணக்கு போட்டு பாருங்க.  அதெல்லாம் செய்யதவங்க இதுக்கு மட்டும் எதுக்குங்க குரல் குடுக்குறீங்க. எல்லாமே தமிழக மக்களின் பணம் தான். அதையும் கொஞ்சம் யோசிங்க. ஊழல் இல்லாத அரசாங்கமே உலகில் இல்லை. நாளைக்கு நீங்களும் நானும் அந்த இடத்தில இருந்தால் விட்டதை வட்டியும் முதலுமாய் சம்பாதிக்கதான் செய்வோம். ஊழல் தான் விஷயம் என்றால், நீங்க ஆதரித்து பேசுவதே தேவையற்ற ஒரு செயல். 

அடுத்து, இந்த நூலகம் சென்னையின் மையப்பகுதியில் இல்லை புத்தகங்களை எழும்பூருக்கு மாற்றுவது தான் சரின்னு குரல் விடுறீங்களே நீங்க பேசுறதும் தேவையற்ற ஒரு விஷயம்.  சென்னையில்தான் பல multiplex  இருக்கு, ஷாப்பிங் மால் இருக்கு, KFC இருக்கு, அது இருக்கு , இது இருக்கு மார் தட்டுகிறீர்களே அதே மாதிரி சென்னையில் தான் World Class Library இருக்குனு மார் தட்டுங்க. நீங்க படிக்கிறீங்களோ இல்லையோ யாராவது ஒருத்தராவது அங்க படிக்கதான் செய்றாங்க.  

 200 கோடியை வைத்து மாவட்டங்கள் தோறும் நூலகங்களை மேம்படுத்தி இருந்தால் , ஒட்டு மொத்த தமிழகமுமே பயன்படுத்தி இருக்குமேன்னு சொல்றீங்களே இது நியாயமற்ற  ஒரு சிந்தனை...எது எதுக்கோ போராட்டம், புரட்சின்னு அலைபவர்கள் இதே மாதிரி எல்லா மாவட்டத்திலும் வேணும்னு கொடி பிடிங்க. உங்க காசுதானங்க அது.  இந்த 200 கோடிதான் உங்க பணமா? கட்டிடம் கட்டி தர அரசாங்கத்திடம் நிதி இல்லையா, இடம் இல்லையா ? கேளுங்க எல்லா மாவட்ட காரங்களும் எங்களுக்கு இப்படி ஒரு நூலகம் வேண்டும்னு. அத விட்டுட்டு நா புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது.

மருத்துவமனை  வருவது தான் நல்லதுன்னு நினைக்கின்றவருகளுக்கு என் தாழ்ந்த வேண்டுகோள்.  இது மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமே இல்லை. நம் முதல்வரே வாய் விட்டு கூறியதால், தொடர்ந்து சென்னையில் ஒரு புதிய குழந்தைகள் மருத்துவமனை கட்டி தர சொல்லி கேட்போம். போராட்டம் பண்ணுவோம்.

என்னை பொருத்தவரைக்கும், இந்தியாவிற்கு தாஜ் மஹால் எப்படியோ, அதே போல் சென்னைக்கு அண்ணா லைப்ரரி.


யோசியுங்கள் ஆதரவாளர்களே ! நன்றி. வணக்கம். 



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...