Saturday 1 October, 2011

அக்டோபர் 1 , 2011 . இந்த பதிவ மறக்காம படிங்க நண்பர்களே.

வணக்கம் நண்பர்களே, இன்று அக்டோபர் 1 , மாதத்தின் முதல் நாள். இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். 




இன்று பலர் சம்பளம் வாங்கி இருப்பீர்கள். சிலர் நேற்றே வாங்கி இருப்பீர்கள். உங்களிடம் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ள கடமை பட்டு இருக்கிறேன். 

இந்த மதத்தில் விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருகின்றது. தீபாவளி பட்சணம், புத்தாடைகள், வெடிகள் போன்றவைக்கு இப்பவே பட்ஜெட் ஒதுக்கி கொள்ளுங்கள்.


இந்த முறை வெடிகள் வாங்கும் பொழுது தனியார் அங்காடிகளில் வாங்காமல், அரசின் கூட்டுறவு அங்காடிகளில் வாங்கி பணத்தை சேமிப்பீர் .

 
மழை காலம் விரைவில் தொடங்கிவிடும், ஆதலால் இப்பவே ரெயின் கோட் , குடை, குழந்தைகளுக்கும் உங்களுக்கும் ஸ்வட்டர் வாங்கி வைத்து கொள்ளுங்கள் ..சீசன் காலங்களில் விலைகள் அதிகரித்து விடும். 



தீபாவளி சலுகையில் கிடைக்கின்றது என்று பொருட்களை வாங்கும் முன் பொருட்களை சோதித்து பார்த்து வாங்குங்கள். 

நவம்பர் மாதம் அய்யப்ப பக்தர்கள் மாதம்..சபரிமலைக்கு செல்பவர்கள் இப்பவே ரயில், பேருந்துகளில்  முன் பதிவு செய்து விடுங்கள். ரயில்களில் முன் பதிவு தொடங்கி விட்டது. நான் எனக்கு டிக்கெட் எடுத்து வைத்து விட்டேன். 


******************************************************

முக்கிய அறிவிப்பு 


யுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டி -2011 



******************************************************

வேறெந்த முக்கிய தகவல்களை நான் சொல்ல மறந்திருந்தால் , நீங்கள் கருத்து பெட்டியில் பகிர்ந்து விடுங்கள்.

நன்றி நன்றி நன்றி





1 comment:

  1. முன் ஜாக்கிரதையாக இருந்தால்,பின் வருத்தப்பட வேண்டாம்!
    9ஆம் தேதி சந்திப்போம்!

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...