Wednesday 22 December, 2010

சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்

அன்பு நண்பர்களே,  சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார் படித்து முடித்து விட்டேன்.இனி கீழே வருவது புத்தகத்தின் விமர்சனம் அல்ல.வேறு எப்படி என்றாலும் எடுத்துகொள்ளுங்கள்.

சாரு, சரசம்-சல்லாபம்-சாமியார் என்ற டைட்டிலுக்கு  முதலில் copyright வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஏனனில் பிற்காலத்தில்  பட அதிபர்களிடம் நாம் சண்டைக்கு செல்ல நேரிடும்.அவ்வளவு அருமையான, பொருத்தமான டைட்டில் இது.



 சாரு, நீங்கள் உங்கள் நண்பர் கண்ணனை மட்டுமல்ல என்னையும் பிடதி ஆசிரமத்திருக்கு அழைத்து சென்றது போல் தான் இருக்கிறது புத்தகத்தை படிக்கும் பொழுது.

புத்தகம்  பிடதி ஆசிரமத்தின் terms & conditions -ல் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.எப்படி நித்தி இப்படி பயமே இல்லாமல் terms & conditions வகுத்துகொண்டுள்ளார் என்பது ஆச்சிரியபட  வைக்கிறது.

நித்தியானந்தாவை மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் பிற நந்தாக்களின் மடத்தனத்தினையும் குருரத்தனத்தினையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் சாரு.

ஏமாற்றுபவர்கள் விட ஏமாறபட்டவர்களின் வாய் சொவுடால் தான் தாங்க முடியவில்லை ,வேறு யாரு ராகசுதாவை தான் சொல்கிறேன். இன்னமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார் போல.ஆனால் அவர் பாடல்களை மாற்றி எழுத தெரிந்த கவிதாயினி என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

ரஞ்சிதாவை பற்றி கூற தேவை இல்லை...

ஆங்காங்கே சாரு நமக்கு தெரிந்த தெரியாத சில உண்மையான யோகிகளை பற்றி புத்தகத்தில் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.உண்மையிலேயே நித்தி போன்ற குஜால் சாமியார்கள் வாழும் உலகில் சாரு குறிப்பிடும் யோகிகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம். (நித்திக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை).

கட்டுரையில் ஆங்காங்கே ரஜினி, கலைஞர்,காமெடி  நடிகர், வாரிசு தலைவரின் நண்பர் அபி ;-) போன்றோர் வருகிறார்கள். (நித்திக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை).

ஆரம்பத்தில் கூறியது போல,சாரு தான் நண்பர் கண்ணனை மட்டுமல்ல என்னையும் பிடதி ஆசிரமத்திருக்கு அழைத்து சென்றது போல் தான் இருக்கிறது புத்தகத்தை படிக்கும் பொழுது.

ரிப்போர்ட்டரில் இத்தொடரை படிக்காதவர்கள், சரசம்-சல்லாபம்-சாமியார் வாங்கி படியுங்கள்.  மேலும் பல உண்மைகளை தெரிந்து கொள்வீர்கள்.

11 comments:

  1. அப்போ நீங்கள் சாருவில் "கடவுளைக் கண்டேன்" படிக்கவில்லை போல் உள்ளது.

    ReplyDelete
  2. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அப்போ நீங்கள் சாருவில் "கடவுளைக் கண்டேன்" படிக்கவில்லை போல் உள்ளது.//

    அந்த புத்தகம் எப்ப வரும்???

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒரு முறை சாரு தன் வலையில்......

    சாரு காரில் சென்று கொண்டிருந்த போது நித்தியனந்தரைப் பற்றி பெசிக்கொண்டிருந்ததாகவும், அப்பொழுது எதிரில் வந்த காரில் நித்தியானந்தரைப் பார்த்ததாகவும், அதே நேரத்தில் வேரொரு இடத்தில் நித்தியானன்தர் இருந்த்தாக அவர் நண்பர் கூறியாதகவும் எழுதி இருந்ததாக நினைவு.

    அது சாரு விட்ட புருடாவா..இல்லை நித்தியானன்தர் நிஜமாகவே அவ்வளவு சக்தி படைத்தவரா?

    என்ன சாரு?

    ReplyDelete
  5. I think CharuNivedita wrote a lot about the "miracles" of a Muslim saint (living) and Nityananda.....then bashed them....

    ReplyDelete
  6. Then he wrote a lot about Mishkin.. now bashing him..

    looks like it is not advisable to be his friend..
    I think he is one who has issues

    ReplyDelete
  7. He is nothing more than a gossip columnist...

    and in his "novels" he always talks about sex ..its boring...

    may be has fetish about writing about sex ...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ராஜேஷ் போன்ட்றவர்களுக்கு sex ஒரு சங்கடம் மட்ரும் சம்ப்ரதாயம் மட்டுமே.கொன்டாடடமாக பார்க்க தெரியாது போலும்.
    ராஜேஷ் திருமனம் செஇது கொள்ளும் பெண்ணொ அல்லது இனிமேல் தான் ஆகபோகொரது என்றால் ஜாகிரதை பெண்களே..

    ReplyDelete
  10. எழுத்தாளன் நிறைய படிச்சிருந்தால் அவனுக்கு அறிவு வளர்ந்திருக்க வேண்டும். சூ மந்திரக்காளி சாமியார் பின்னாடி போய் எல்லாத்தையும் சொடுக்கும் நேரத்தில் சரி பண்ணிருங்கன்னு போய் இளிச்சா, அவன் உன் பொண்டாட்டியதான் சொடுக்கற நேரத்துல சரி பண்ணுவான். 30 வருசமா குடிக்க வேண்டியது, அப்பறம் சாமியார்ட்ட போய் என் உடம்பை ஆரோக்கியமாக்கியிருங்க அப்படிங்கறது.அப்ப உடற்பயிற்சி பண்ணி பாத்து பாத்து சாப்பிடறவன்லாம் கே..கூ..?

    இதே மாதிரிதான் இந்த பாலகுமாரனும். இந்த விசிறி சாமியார ஒரு cult-ஆ மாத்திர வேண்டியது. அவர பத்தி பஜன் பாட வேண்டியது, அவர் போட்டோவை வீட்டுல, பர்ஸ்ல. அப்பறம் எதுக்கெடுத்தாலும் குரு, குரு, குரு. மயிலாப்பூர்ல வீடு வாங்கணுமா? குருவேன்னு மனசுல நெனச்சுக்க வேண்டியது. அப்பறம் பொண்ணுக்கு கல்யாணமாகணுமா? இருக்கவே இருக்கு குரு பேர். பையனுக்கு படிப்பு, heart by-pass surgery, no problem குருவோட பாதத்த கெட்டிமா புடிச்சுக்கோ ரெண்டு நாளா உச்சா போலியா? அதுக்கும் குருதான். ஏண்டா உங்களுக்கெல்லாம் கடவுள்னா என்ன வரம் தர மட்டும்தானா? கடவுளயும் ஒரு கலெக்டர் மாதிரி, அமைச்சர் மாதிரி வரம் கொடு சாமின்னுட்டு

    எல்லாம் இந்த சின்ன வயசுல ஆரம்பிச்சது. சாமி, நல்ல புத்தி குடுங்க நல்ல படிப்பு குடுங்கன்னு சாமி முன்னால கேட்க ஆரம்பிச்ச புத்தி, இவ்வளவு வயசாகியும் இன்னும் வளரவேயில்லையே? நீங்கள்லாம் என்னத்த ராஜா படிச்சீங்க இத்தன வருசமா?

    கேட்டா நான் குழந்த மாதிரி, எனக்கு வெகுளி மனசுன்னு...ஏன் ராஜா ஆளும் வளரணும் அறிவும் வளரணும்னு பாட்டு கேட்டதில்லையா?

    ReplyDelete
  11. netthiyadi Fred..arumaiyana comment...pramadham

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...